Breaking News
இந்த சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் அணு ஆயுதம் தான் – ரஷியா எச்சரிக்கை
மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா இன்று 28-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.
இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மேலும், ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இதன் காரணமாக சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த போர் மூன்றாம் உலகக்போருக்கு வழிவகுக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துவருகிறார். இந்த போரில் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்துமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ரஷிய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் அணு ஆயுதம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரஷிய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது. அணு ஆயுதம் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் அனைத்தையும் வாசியுங்கள். ரஷியா என்ற நாடு இந்த உலகத்தில் இருக்குமா? இருக்காதா? என்ற உச்சபட்ச அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அணு ஆயுதத்தை நாங்கள் பயன்படுத்துவோம்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.