Breaking News
இரவு நேரத்தில் சைக்கிளில் ரோந்து வந்த போலீஸ் இணை கமிஷ்னர் ரம்யா பாரதி…!
சென்னை,
சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி. இவர் நேற்றிரவு திடீரென சைக்கிள் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டார்.  சுமார் ஒன்றரை மணி நேரம் சைக்கிளில் வடக்கு மண்டலத்தில் உள்ள 8 காவல் நிலையங்களுக்கு சைக்கிளிலேயே சென்று ஆய்வு பணி செய்தார்.
K.RAMESH
9840502445
சுமார் 9 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் ரோந்து சென்ற அவர் வடசென்னை பகுதிகளில், இரவு ரோந்து வாகன காவலர்கள் மற்றும் பீட் அதிகாரிகள், காவல்துறையினர் எவ்வாறு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காவல்துறையினர் விழிப்போடு பணியை மேற்கொள்ள இணை ஆணையர் ரம்யா பாரதி  காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார், மேலும் பொதுமக்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.