Breaking News
இந்தியாவில் தொடர்ந்து சரியும் கொரோனா: புதிதாக 2,568 பேருக்கு தொற்று
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. நேற்று 2-வது நாளாக பாதிப்பு குறைந்தது. நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 157 ஆக குறைந்தது.
இந்நிலையில் இன்று புதிதாக 2,568 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 568 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,84,913 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,23,889 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,911 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,41,887 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 19,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,89,41,68,295 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,23,795 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,19,552 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 83,86,28,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.