Breaking News
இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு குழாய் வழி எரிபொருள் வினியோகம் அடுத்த மாதம் தொடங்குகிறது

கவுகாத்தி,

இந்தியாவுக்கும், வங்காள தேசத்துக்கும் இடையே நல்லதொரு நட்புறவு உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் உள்ள அசாம் நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சந்தையிடல் முனையத்தில் இருந்து வங்காளதேசத்தின் பர்பதிபூரில் உள்ள வங்காளதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு குழாய் வழியாக எரிபொருள் எடுத்துச்செல்ல திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக 130 கி.மீ. தொலைவில் இந்த இந்திய, வங்காளதேச நட்புறவு குழாய்வழி (ஐபிஎப்பிஎல்), ரூ.377.08 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிதியுதவியைக் கொண்டு இந்த இரு தரப்பு திட்டத்தின் என்ஜினீயரிங் பணிகள் கடந்த மாதம் 12-ந் தேதி முடிந்தது. இந்த நிலையில், இந்த குழாய் வழி எரிபொருள் வினியோக திட்டத்தை அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்கி வைக்க திட்டமிட்டிருப்பதாக நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.