
மெடிக்கல் அருகில் நிறுத்தி வைத்துவிட்டு மருந்து வாங்குவதற்கு சென்றவர் பைக் திருட்டு – பைக் திருடிய தூத்துக்குடி இளைஞர் கைது
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது செய்து திருடப்பட்ட ரூபாய் 80,000/- மதிப்பிலான இருசக்கர வாகனம் மீட்டனர்.
தூத்துக்குடி ஐயப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த சுடலைகுமார் மகன் மகாராஜா (30) என்பவர் கடந்த 11.02.2024 அன்று ஜெயராஜ் ரோடு பகுதியில் உள்ள ஒரு மருந்தகம் அருகே நிறுத்திவிட்டு வந்து பார்க்கும் போது அந்த இருசக்கர வாகனம் திருடு போனது.
இதுகுறித்து மகாராஜா நேற்று அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனியைச் சேர்ந்த செந்தில் மகன் காளிதாஸ் (20) என்பவர் மேற்படி மகாராஜாவின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் போலீசார் காளிதாஸை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 80,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.