Breaking News
வெள்ளை மாளிகை நிர்வாக தலைமை பொறுப்பில் இந்தியர்

வெள்ளை மாளிகை நிர்வாக தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நியோமி ராவ் நியமிக்கப்பட உள்ளார்.

அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார அலுவலகத்தின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நியோமி ராவ், 44, நியமிக்கப்பட உள்ளார். இது தொடர்பாக, அமெரிக்க பார்லிமென்டில், செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில், நியோமி, 54க்கு 41 என்ற ஓட்டு விகிதத்தில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம், வெள்ளை மாளிகையின் தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார அலுவலகத்தின் தலைமை பொறுப்பில், நியோமி நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டால், வெள்ளை மாளிகை நிர்வாக விவகாரங்களை நியோமி கவனித்துக் கொள்வார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.