தூத்துக்குடியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவருக்கு குண்டாஸ் – கலெக்டர் மற்றும் எஸ்பி நடவடிக்கை

தூத்துக்குடியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவருக்கு குண்டாஸ் – கலெக்டர் மற்றும் எஸ்பி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கோ. லட்சுமிபதி இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை.*

கடந்த 20.01.2024 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்வைக்காரன்மடம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி மகன் சம்பத் செல்வகுமார் (60) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சேர்வைக்காரன்மடம் கிழக்குத் தெருவை சேர்ந்த ஜெயபாண்டி மகன் மாரிசெல்வம் (36) என்பவரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.  இவ்வழக்கின்  மாரிசெல்வம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜானகி,

கடந்த 02.02.2024 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை அருவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கரசுப்பு மகன் ஆண்டியா (எ) ஆண்டிகுமார் (23) என்பவரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான ஆண்டியா (எ) ஆண்டிகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி இ.ஆ.ப சேர்வைக்காரன்மடம் கிழக்குத் தெருவை சேர்ந்த ஜெயபாண்டி மகன் 1) மாரிசெல்வம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கரசுப்பு மகன் 2) ஆண்டியா (எ) ஆண்டிகுமார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )