3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பாலம் உடனடியாக சரி செய்ய வேண்டும் – கலெக்டருக்கு கோரிக்கை

3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பாலம் உடனடியாக சரி செய்ய வேண்டும் – கலெக்டருக்கு கோரிக்கை

தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 17.12.2023ந்தேதி பெய்த கனமழையின் காரணமாக கோரம்பள்ளம் அருகேயுள்ள அந்தோணியார்புரம் பாலம் உடைப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடர்ந்தது. இந்நிலையில், 3 மாதங்களை கடந்தும் இதுவரை அந்த பாலம் சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பாலத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதையில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், இந்த சாலை ஒன்று தான் தூத்துக்குடி- திருநெல்வேலியை இணைக்கின்ற பிரதான சாலையாகும். இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருவதால், அவசர நிலை கருதி விரைவாக  உடனடியாக சரி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )