
தூத்துக்குடி கடற்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் – கொலையா? தற்கொலையா-? போலீஸ் விசாரணை
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடப்பதை கண்ட அப்பகுதி மீனவர்கள் தென்பாகம் காவல நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்த அந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா.?. அல்லது கொலையா.? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES மாவட்டம்