
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் தகவல்
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, 36.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தொகுதி ஒன்றுக்கு 3 எண்ணிக்கையிலான பறக்கும் படைகள் வீதம் 3 சுழற்சியாக மொத்தம் 54 பறக்கும் படைகளும், சட்டமன்ற தொகுதி ஒன்றுக்கு 3 எண்ணிக்கை வீதம் 3 சுழற்சியாக மொத்தம் 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள் இம்மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
C-Vigil செயலி மூலம் 43 கட்டணமில்லா தொலைபேசி மூலம் 21, வாட்ஸ்அப் செயலி மூலம் 6 மற்றும் இணையதளம் வாயிலாக 44 என மொத்தம் 114 புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் காணப்பட்டுள்ளன. இதற்கெனவே பிரத்யோக தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (24×7) முழு நேரமும் செயல்படுகிறது. தேர்தல் தொடர்பான ஒரு 1800-599-1960 , 0461-2981900 , 2981901 , 2981902 , 2981903 Whatsapp எண். 94864-54714 .
தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைகள் செயல்படுகின்றன. இது தவிர ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒன்று வீதம் 6 எண்ணிக்கையிலான வீடியோ கண்காணிப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இந்த பறக்கும் படை குழுவினர் 28.03.2024 (மு.ப. 6.00 மணி முதல் 29.03.2024 (மு.ப. 6.00 மணி வரை 5,75,400/-ம்) இது வரை உரிய ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டது மடிக்கணினி மற்றும் பரிசுப் பொருட்கள் மதிப்பு ரூ.16,73,200/ -தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.