Breaking News
பெங்களூரு அணியின் வெற்றி நீடிக்குமா? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்

முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த 2 ஆட்டங்களில் (கொல்கத்தா மற்றும் சென்னைக்கு எதிராக) தொடர்ச்சியாக நூலிழை வித்தியாசங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களில் ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டிய நெருக்கடியுடன் விளையாடி வரும் பெங்களூரு அணிக்கு உள்ளூரில் ஆடுவது சற்று சாதகமான விஷயமாகும். அது மட்டுமின்றி இந்த சீசனில் ஏற்கனவே பஞ்சாப் அணியை அவர்களது இடத்தில் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதால் பெங்களூரு அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

பஞ்சாப் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் (31 சிக்சருடன் 421 ரன்) நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக சோபிக்காததால் தான் கடந்த 4 ஆட்டங்களில் 3-ல் அந்த அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. பந்து வீச்சில் வலுவாக உள்ள நிலையில் பேட்ஸ்மேன்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பஞ்சாப் அணி, அபாயகரமான அணியாக உருவெடுத்து விடும். பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.