தூத்துக்குடியில் 2வது மனைவியுடன் தொடர்பில் இருப்பவரை தீர்த்துக்கட்ட 6 பேர் கொண்ட கூலிப்படை – பாஜக பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் 2வது மனைவியுடன் தொடர்பில் இருப்பவரை தீர்த்துக்கட்ட 6 பேர் கொண்ட கூலிப்படை – பாஜக பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் இரண்டாவது மனைவியுடன் தொடர்பில் இருப்பவரை கொலை செய்ய மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபரும், பாரதிய ஜனதா கட்சியின் தொழில்பிரிவு மாவட்ட துணைத்தலைவருமான பால பொய் சொல்லான் மீது வழக்கு பதிந்து, கூலிப்படையை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர.

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பால பொய் சொல்லான் தொழிலதிபரான இவர் பாரதிய ஜனதா கட்சியில் தொழில்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பதவி வகித்து வருகிறார. பால பொய் சொல்லானுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கிரேஸ் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பால பொய் சொல்லாணும், கிரேசும் பிரிந்து வாழ்கின்றனர். மேலும், பால பொய் சொல்லான் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடபாகம் காவல் நிலையத்தில் கிரேசி புகாரளித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே கிரேசிக்கும் அவரது வீடு அருகே வசித்து வரும் அந்தோணிசாமி என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்தோணி சாமியுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கிரேசி தனக்கு எதிராக செயல்படுவதாக எண்ணிய பால பொய் சொல்லான் அந்தோணிச்சாமியை கூலிப்படை மூலம் தீர்த்துக் கட்ட எண்ணியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை போலீசார் நேற்று தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் உள்ள பால பொய் சொல்லானுக்கு சொந்தமான ஒரு இடத்தை சோதனை செய்தனர். அப்போது அங்கே பதுங்கி இருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் 6 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்‌. மேலும், அவர்களிடமிருந்து வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் விருதுநகர் மாவட்டம் கம்பம்பட்டி தெருவை சேர்ந்த விஜய் என்ற கருப்பசாமி (23), முத்தழகு என்ற அருள்(30), விருதுநகர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த சந்தனபாண்டி (21), விருதுநகர் ரோசன்பட்டி அரண்மனை தெருவை சேர்ந்த சக்திவேல் (25), அம்பேத்கர் நகரை சேர்ந்த வல்லரசு (25), தூத்துக்குடி தாளமுத்துநகர் கோமாஸ்புரம் ராஜீவ்காந்தி குடியிருப்பை சேர்ந்த ராஜா (38) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன என்பதும், இதன் காரணமாக கைதாகி ஜாமீனில் வெளிவந்திருப்பவர்கள் என்பதும் தெரியவந்தது, இதுத்தொடர்பாக பொய் சொல்லான் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் பாஜக தொழில்பிரிவு மாவட்ட துணைத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான பால பொய் சொல்லான் தனது இரண்டாவது மனைவியுடன் பழகிய நபர் கொலை செய்ய கூலிப்படையை அழைத்து வந்து தங்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )