தூத்துக்குடியில் ஓட ஓட விரட்டி வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் ஓட ஓட விரட்டி வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஈனமுத்து மகன் செந்தில் ஆறுமுகம் வழக்கறிஞரான இவர் அந்தப் பகுதியில் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது தங்கை கணவரான கோவில்பட்டியில் வசித்து வரும் கோபிநாதன் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது . இதுத்தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், செந்தில்குமார் நேற்றிரவு மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அடைத்து விட்டு இரண்டு தெருக்கள் அடுத்து உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேருக்கும் மேற்பட்ட கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டிக் கொடூரமாக படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்தனர். மேலும், வழக்கறிஞர் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா.?. அல்லது வேறு ஏதும் தொழில் போட்டியா.?. என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி சென்று வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )