திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்த செவிலியர்கள்-   மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக உறவினர்கள் சாலை மறியல்

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்த செவிலியர்கள்- மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக உறவினர்கள் சாலை மறியல்

திருச்செந்தூர் ஆலந்தலை, ஆலமரத்துவிளையைச் சேர்ந்தவர் வினோத். இவர் சென்னை மதுரவாயலில் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி சசிகலா (28). இவர்களுக்கு திருமணமாகி பிரின்சி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று மதியம் டாக்டர் இல்லாததால் நர்சுகள் பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை சுகபிரசவமாக பிறந்துள்ளது. இந்நிலையில் 7ம் தேதி காலை குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து 8ம் தேதி குழந்தையின் தாயும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 9ம் தேதி குழந்தைகளுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை திடீரென உயிரிழந்துள்ளது.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் அலட்சியமாக பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக கூறி திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முன்பு குழந்தையின் தந்தை வினோத் மற்றும் அவரது உறவினர்கள் நேற்றிரவு 9:00 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து,
தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, ராமேஸ்வரி, ரெகுராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ அலுவலர் டாக்டர் பாபநாசகுமாரிடம் புகார் அளித்தனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனரிடம் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால், போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )