தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை எச்சரிக்கை

குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோர பகுதிகளில் மிக கனமழை மற்றும் அதிவேக காற்று வீசப்படுவதால் நான்கு நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை, வானிலை ஆய்வு மையத்திலிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் செய்தி மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம், தூத்துக்குடி மின்னஞ்சல் செய்திகளில் 17.05.2024 அன்று முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 17.05.2024 அன்று குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோர பகுதிகளில் சுழல் காற்றானது மணிக்கு 40-45 கி.மீ முதல் 55கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள 16ந்தேதி இன்று முதல் 4 நாட்களுக்கு நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும், தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக நிறுத்திடுமாறும் தங்களது சங்கங்களைச் சார்ந்த அனைத்து வண்ணம் அறிந்திடும் மீனவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )