
கோவில்பட்டியில் நள்ளிரவில் பயங்கரம் – தூங்கிக் கொண்டிருந்த இருவர் வெட்டிப் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் வெள்ளத்துரை (50), இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்துள்ளார் வழக்கமாக இரவில் அவரது மீன் கடையில் வெள்ளத்துரை தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு வழக்கம் போல வெள்ளத்துரை கடையில் தூங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளது. இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததுள்ளார். இதையடுத்து இரு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது .
இதுகுறித்து தகவல்றிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர.
நள்ளிரவில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.