மகா சிவராத்திரி மகா மந்திரம் போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசளிப்பு விழா

மகா சிவராத்திரி மகா மந்திரம் போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசளிப்பு விழா

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நலம் தரும் விநாயகர் ஆலயத்தில் ஓம் நமச்சிவாய திருநாம மந்திரம் எழுதிய போட்டியாளர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று நடந்தது தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 8 3 2024 மகா சிவராத்திரி அன்று நடைபெற்ற ஓம் நமச்சிவாய மகா மந்திரம் எழுதிய போட்டியாளர்கள் அதில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் இன்று மாலை கோவில் வளாகத்தில் வைத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஆலய கமிட்டி தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஆலய நிர்வாக கமிட்டி செயலாளர் பத்மநாபன் துணைச் செயலாளர் என் கணேசன் ஆகியோர் முன்னிலையில் பொருளாளர் சரவணகுமார் தீயணைப்புத்துறை ஓய்வு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் துணைப் பொருளாளர்  ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவிற்கு சிப்காட் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், பைனான்ஸ் உரிமையாளர் செல்வராஜ், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். விழாவில் பி.எஸ்.ஏ சி  கால்ராஜா ராம், முதன்மை மேலாளர் ஓய்வு காந்தி, கன்யா ட்ரேடர்ஸ் சந்திரசேகர், விக்னேஷ் இன்ஜினியரிங் எம் எஸ் ராஜா ராம், ரவி ரோடு லைன்ஸ் ரவிச்சந்திரன், பாலாஜி டிரேடர்ஸ் தொழிலதிபர் ராஜ், ஆன்மீக பஜனை குழு பாலு, பாலகுருசாமி, வேல்முருகன், போட்டி  ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணவேணி, சந்தான சங்கர், பிரபாகர் உட்பட நிகழ்ச்சி தொகுப்பாளர் சமூக நல சேவகர் ராதா,  ஆலய நிர்வாக கமிட்டி துணைத் தலைவர் சிங்கராஜ், ஆலய அர்ச்சகர் என் சங்கர் ஐயர் போன்றோர் பங்கு பெற்றனர்.

இதில் தமிழன்டா கலைக்குழு தலைவரும் தமிழன்டா இயக்கத்தின் தலைவருமான ஜெகஜீவன் கலந்து கொண்டு பாரம்பரிய தமிழர் கலைகள் பறிபோகின்றன செத்த வீட்டுக்கு தமிழர் கலைகள், சுப நிகழ்ச்சிகளுக்கு மாற்று மாநில கலைகளா? என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு தகவல்களை பகிர்ந்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )