தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா  மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பிரேம் ஆனந்த் மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (18.06.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே  சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த சங்கீதமணி மகன் முருகன் (எ) சிங்கம் (39) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே போலீசார் முருகன் (எ) சிங்கத்தை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )