விவசாயி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை – தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

விவசாயி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை – தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மேலப்பாறைப்பட்டியைச் சோ்ந்தவர் தங்கவேல் மகன் அண்ணாதுரை (60). விவசாயி. இவரது மகன் அரிகிருஷ்ணன் துபையில் வேலை பாா்த்து வந்தாா். அப்போது, அவரது மனைவியிடம் அரிகிருஷ்ணனின் நண்பரான மும்மலைப்பட்டியைச் சோ்ந்த முத்துமாரியப்பன் (41) தகராறில் ஈடுபட்டாராம். இதை அண்ணாதுரை கண்டித்து, போலீஸில் புகாா் அளித்தாா்.

இதனால், முத்துமாரியப்பன் தனது நண்பா்களான மும்மலைப்பட்டி கருப்பசாமி (54), பாலசுப்பிரமணியன் (52) ஆகியோருடன் சோ்ந்து 2019ஆம் ஆண்டு அண்ணாதுரையை வெட்டிக் கொலை செய்தாராம். இதுதொடர்பாக கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, பாலசுப்பிரமணியன் உயிரிழந்துவிட்டாா். இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதி தாண்டவன் விசாரித்து வந்த நிலையில், முத்துமாரியப்பன், கருப்பசாமி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த் காபிரியேல் ராஜ் வாதாடினாா்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )