விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி சாத்தான்குளம் உட்கோட்ட காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் கென்னடி மேற்பார்வையில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் அனிதா தலைமையில் சார்பு ஆய்வாளர் சண்முகராஜ் மற்றும் போலீஸார் கடந்த 05.07.2024 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜே.ஜே. அவர்கள் திருநெல்வேலி ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த லூர்துராஜா மகன் ஜோசப் டேனியல் (23) மற்றும் தூத்துக்குடி உடன்குடி தங்கநகரம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் மகன் ஜெபக்குமார் (25) ஆகியோர் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே போலீசார் எதிரிகள் ஜோசப் டேனியல் மற்றும் ஜெபக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 95 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )