Breaking News
மாணவர் ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் பலி

டில்லி காஷ்மீரி கேட் பகுதியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஓட்டி சென்ற கார் மோதியதில் சாலையில் தூங்கிய இரண்டு பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் கூறுகையில், மாணவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனக்கு 18 வயது நிரம்பிவிட்டது என்கிறார். ஆவணங்களை சரிபார்த்து வருகிறோம் என்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.