Breaking News
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை


காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் மறைந்து இருந்து தாக்குதல் நடத்தும் சம்பவமானது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

இதுபோன்று பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

சோபோர் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் காணப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல்களின்படி பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு நகர்ந்து உள்ளனர். அப்போதுதான் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினர் சரியான பதிலடியை கொடுத்தனர். பதிலடியில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். பயங்கரவாதியிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியானது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

நன்றி :தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.