Breaking News
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த பயங்கரம்


பெங்களூரில் நியூ இயர் கொண்டாட்டத்தின் போது எம்.ஜி சாலையில் சென்ற பெண்களிடம் எல்லாம் ஒரு கும்பல் தவறான முறையில் நடந்துகொள்ள, உதவி கேட்டு அலறியடித்து ஓடியிருக்கிறார்கள் அந்தப் பெண்கள். இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் தீயாய்ப் பரவ, ‘நாங்கள் 1500 போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருந்தோம். அதையும் தாண்டி இந்த சம்பவம் நடந்துவிட்டது. செக்யூரிட்டி கேமராக்களை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்’ என விளக்கம் அளித்திருக்கிறது அந்நகர காவல்துறை. இந்நிலையில், ‘புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இப்படியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன’ என ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா.

நன்றி : விகடன்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.