Breaking News
திமுக பொதுக்குழு – கருணாநிதி பங்கேற்கவில்லை!

இன்று தி.மு.க-வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் பொதுக்குழு நடந்து வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க-வின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னைக்கு வந்துள்ளனர்.

பல முக்கிய முடிவுகள் குறித்து இந்த பொதுக்குழு கூறப்படும் என்று தகவல்கள் வந்த நிலையில், தி.மு.க-வின் தலைவர் மு.கருணாநிதி இதில் பங்கேற்ப் போவதில்லை என்று கூறப்பட்டது. முதன்முறையாக, தி.மு.க தலைவர் கருணாநிதி இல்லாமல் அக்கட்சியின் பொதுக்குழு நடக்கிறது. கருணாநிதி இல்லாத காரணத்தால், தி.மு.க-வின் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் பொதுக்குழு நடந்து வருகிறது.

இந்த பொதுக்குழுவில், திமுக-வின் பொருளாலர் ஸ்டாலின், அக்கட்சியின் செயல் தலைவராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ.ராமசாமி, கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, கோ.சி.மணி போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.