Breaking News
விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்

தர்மபுரியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொண்டர்களுடன் அவர் புகைப்படம் எடுத்து கொண்டார்.

விஜயகாந்த் வருகை

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ‘உங்களுடன் நான்‘ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக தர்மபுரியில் நடந்த ‘உங்களுடன் நான்‘ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் நேற்று காலை தர்மபுரி வந்தார். அவருடன் கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்தும் வந்தார்.

தர்மபுரியை அடுத்த சோகத்தூரில் உள்ள தர்வின் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் குடும்பத்தினருடன் விஜயகாந்த் குழு புகைப்படம் எடுத்து கொண்டார். இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்களுடன் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

வரவேற்பு

முன்னதாக தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த விஜயகாந்திற்கு மாவட்ட எல்லையான தொப்பூரில் மாவட்ட செயலாளர் டாக்டர் இளங்கோவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், மாவட்ட அவைத்தலைவர் தம்பி ஜெய்சங்கர், பொருளாளர் காவேரிவர்மன், மாநில நிர்வாகி விஜய் வெங்கடேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.