Breaking News
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆக பதிவு

பாகிஸ்தானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆக பதிவானது.

பாகிஸ்தானில் தென்கடற்பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆக பதிவானது.
அதிகாலை சுமார் 3:03 மணியளவில் இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் கடற்கரை பகுதியான பஸ்னியின் தென்மேற்கு பகுதியில் 23 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 2015 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 400 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கடந்த 2005 ஆம் ஆண்டு 7.6 என்ற அளவில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால், 73 ஆயிரத்திற்கும் மேலானோர் பலியாகி இருந்தனர்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.