Breaking News
முதல்வராக ஓபிஎஸ் நீடிக்க வேண்டும்: கவுதமி விருப்பம்

முதல்வராக ஓபிஎஸ், தமிழகத்துக்கு நீதி என்பதே நமது போராட்டம் என்று கவுதமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் கவுதமி. அக்கடிதம் பெரும் விவாதப் பொருளானது. அக்கடிதத்துக்கு பதில் வரவில்லை என்று பிரதமர் மோடியை ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

தற்போது, “தமிழக மக்களின் விருப்பத்தைக் காக்கும் தமிழக அரசின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. முதல்வராக ஓபிஎஸ், தமிழகத்துக்கு நீதி என்பதே நமது போராட்டம்” என்று தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் கவுதமி.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.