Breaking News
அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் நடவடிக்கை எடுப்பார்: ஜெட்லி

அரசியலமைப்பு சட்டப்படி அரசமைக்க கவர்னர் நடவடிக்கை எடுப்பார்’ என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அருண் ஜெட்லி தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அதிகாரப்போட்டி நிலவுகிறது. இது அக்கட்சியின் தனிப்பட்ட விவகாரம்.

தமிழக நிகழ்வுகளுக்கும் பா.ஜ., மற்றும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பது அவர்களது உள்கட்சி விவகாரம். அரசியலமைப்பு சட்டப்படி அரசமைக்க கவர்னர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.