Breaking News
சட்டசபையில் நாற்காலி வீச்சு; ரகளை

ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் தனபால் இருக்கையை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து ஆவேசமுற்ற திமுக. எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரின் மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மைக்குகளை எம்.எல்.ஏ.,க்கள் பிடுங்கி எறிந்தனர்.
ரகசிய ஓட்டெடுப்பு வேண்டும் எனவும் தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்களும், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் கோஷம் எழுப்பினர். தி.மு.க., எம்.எல்.ஏ., பூங்கோதை ஆலடி அருணா, ரவிச்சந்திரனும் இருக்கை மீது ஏறி முழக்கமிட்டனர். காகிதங்களை கிழித்து எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.