Breaking News
அமெரிக்க மக்களின் எதிரி ஊடகங்கள்: அதிபர் டிரம்ப் பாய்ச்சல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பும், பின்பும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தற்போது ஊடகங்களையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது வாரவிடுமுறையை கழிக்க புளோரிடாவில் உள்ள மார்-ய-லகோ பகுதி இல்லத்திற்கு சென்ற டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் ஊடகங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என்று பதிவிட்டுள்ளார். குறிப்பாக CNN, CBS, ABC போன்ற செய்தி ஊடகங்களை போலியான செய்தி ஊடங்கங்கள் என்று டிரம்ப் சாடியுள்ளார்.

மேலும், மற்றொரு ட்விட்டர் பதிவில், ”ஒரு நல்ல செய்தியாளர் சந்திப்பை இதுவரை பார்த்ததில்லை என்று ரஷ் லிம்பக் என்ற ஊடகவியலாளர் கூறி இருந்தார். இதனை பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். போலி ஊடகங்கள் இதனை வித்தியாசமாக, நேர்மையற்ற முறையில் அணுகுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் பல அமெரிக்க அதிபர்கள் ஊடகங்களை விமர்சித்துள்ளனர். இருப்பினும் இந்த அளவுக்கு கடுமையாக இருந்ததில்லை என கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.