Breaking News
இப்போதைக்கு புதிய ரூ.1000 நோட்டு இல்லை : சக்திகாந்த தாஸ்

புதிய ரூ.1000 நோட்டுக்களை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து, மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். புதிய ரூ.1000 நோட்டுக்களை வெளியிடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. புதிய ரூ.500 நோட்டுக்கள் உள்ளிட்ட குறைந்த மதிப்புடைய நோட்டுக்களை அதிகம் அச்சிட்டு, புழக்கத்தில் விடும் பணி நடந்து வருகிறது. ஏடிஎம்.,க்களில் இன்னுமும் பண தட்டுப்பாடு நிலவுவதாக புகார் வருகிறது. தேவையான பணத்தை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து எடுக்குமாறு நாட்டில் உள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரே அதிகமான பணத்தை எடுப்பதால், மற்றவர்களுக்கு பணம் இல்லாமல் போகிறது என அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.