Breaking News
பயங்கரவாதத்தை தூண்டும் இந்தியா: பாக்., அபாண்டம்

பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு இந்தியாவே காரணம் என அந்நாட்டு ராணுவ தளபதி பஜ்வா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாக்., ராணுவம் வெளியிட்ட அறிக்கை: எல்லையில் இந்திய ராணுவம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல் சம்பவங்களை மறைக்கவும், இதிலிருந்து உலக நாடுகளை திசை திருப்பவும் எல்லையில் அத்துமீறி இந்தியா தாக்குதல் நடத்துகிறது. அதே நேரத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நமது போராட்டத்தை இந்தியா பலவீனபடுத்துகிறது. பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்களை இந்தியா ஆதரிப்பதையும், தூண்டிவிடுவதையும் நாம் நன்கு அறிந்துள்ளோம். இந்திய உளவாளி பலுசிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளது, இந்தியாவின் தலையீட்டை உறுதிபடுத்துகிறது. இவ்வாறு ராணுவ தளபதி பஜ்வா கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.