Breaking News
ஆதியோகி சிலை திறப்பு : நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி

ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 24) கோவை வருகிறார்.

ஆதியோகி சிலை திறப்பு :

கோவை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவனின் முக தோற்றத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நாளை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்படும் ஆதியோகி சிலையை மோடி திறந்து வைக்கிறார். இவ்விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, தமிழக முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பிரதமர் வருகை :

விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி, டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மாலை 5.20 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். விழா முடிந்ததும் இரவு 9 மணிக்கு பிரதமர் டில்லி செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி கோவையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.