Breaking News
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம், 4 பேர் படுகாயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பாதுகாப்புப் படையினரின் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு, தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பும் மாறி மாறி துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டனர். இந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். உள்ளூரைச்சேர்ந்த ஒரு வயதான பெண்மணியும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அதிகாலை வேளையில் நிலவிய அடர்ந்த இருட்டை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பியதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் பயங்கரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்துவது இது 3-வது முறையாகும். முன்னதாக காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாகிச்சண்டையில் 6 ராணுவ வீரர்கள் ஒரு மேஜர் ஆகியோர் பலியாகினர்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.