Breaking News
காமராஜர் துறைமுகத்தின் முதல் பெண் இயக்குநர் நியமனம்


எண்ணூர் காமராஜர் துறைமுகத் தின் முதல் பெண் இயக்குநராக எல்.விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.

எண்ணூர் காமராஜர் துறை முகத்தின் அதிகாரி அல்லாத சுயேச்சை இயக்குநராகவும், முதல் பெண் இயக்குநராகவும் எல்.விக் டோரியா கவுரி நியமிக்கப் பட்டுள்ளார். மத்திய கப்பல் துறை அமைச்சகம் இவரை நிய மித்துள்ளது. இவர் 3 ஆண்டுகள் இப்பதவியை வகிப்பார்.

மதுரை சட்டக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த விக்டோரியா கவுரி கடந்த 20 ஆண்டுகளாக மூத்த வழக்கறி ஞராக பணிபுரிந்து வருகிறார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் வழக் கறிஞராக கடந்த 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதைத் தவிர, பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் சார்பிலும் வழக்கறிஞராக பணியாற்றியுள் ளார். டாக்டர் பி.சி.ராய் விருது மற்றும் சகோதரி நிவேதிதா விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

காமராஜர் துறைமுகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.