Breaking News
தஞ்சை, புதுக்கோட்டையில் லேசான மழை

தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்கு பின்னர் லேசான மழை பெய்தது.
சில ஆண்டுகளாக மழை இல்லாமல் வறட்சியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. ராமேஸ்வரத்தில் இந்த மழையின் தாக்கம் இருந்ததது.

மனதை குளிர்வித்தது:

இது போல் தஞ்சாவூரில் மதியம் ஒரு மணியளவில் பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. புதுக்கோட்டையில் லேசான சாரல் மழை பெய்தது. மதுரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான தூறல் மழை விழுந்தது. வறட்சி நிலவி வந்த நேரத்தில் இந்த லேசான மழை மக்களுக்கு சற்று மனம் குளிர்வை தந்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.