Breaking News
வீட்டிலிருந்தே ஊழியர்கள் வேலை: எஸ்பிஐ அறிவிப்பு

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் புதிய வசதியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் :

வீட்டில் இருந்தே பணியாற்றும் இந்த திட்டத்திற்கு வங்கியின் நிர்வாகக் குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய திட்டத்தின்படி, ஊழியர்கள் தங்களின் மொபைல் டிவைஸ்களை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே, வங்கியில் மேற்கொள்ள வேண்டிய அவசர பணிகளை முடிக்கலாம். இதனால் அவர்கள் பயணிக்கும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

மொபைல் மூலம் வேலை :

மொபைல் டிவைஸ்கள் மூலம் டேட்டாக்களை பாதுகாப்பான முறையில் கையாளவும், மொபைல் கணினி தொழில்நுட்பம் மூலம் பணிகளை மேற்கொள்ளவும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மார்க்கெட்டிங், சமூக வலைதள மேலாண்மை, பணம் விநியோகம், புகார்கள் விண்ணப்பங்கள் உள்ளிட்ட பணிகளை ஊழியர்கள் வீட்டில் இருந்தே செய்யும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.