Breaking News
சி.பி.எஸ்.இ., 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று துவக்கம்

சி.பி.எஸ்.இ., நடத்தும் 10 மற்றும் பன்னிரென்டாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்று (மார்ச் 9) துவங்குகின்றன.

நாடு முழுவதும் மொத்தம் 8.86 லட்சம் மாணவ-மாணவிகள் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதற்காக நாடுமுழுவதும் 16,363 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்புத் தேர்வை மொத்தம் 10.98 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இது மொத்தம் 10,678 மையங்களில் நடைபெற உள்ளது. வளைகுடா நாடுகளில் 58 தேர்வு மையங்களும், மற்ற நாடுகளில் 6 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.