Breaking News
புதுவீட்டில் குடியேறினார் ஓ.பி.எஸ்.,

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள புது வீட்டிற்கு குடிபெயர்ந்தார். தமிழக முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்தார். அங்கு அவர் கட்சி தொண்டர்களை சந்தித்து வந்தார். இந்நிலையில், அவர் பதவி விலகி, முதல்வராக இடைப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டை காலி செய்யும்படி பன்னீர்செல்வத்திற்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.இதனை தொடர்ந்து சென்னையில் புதுவீட்டை தேடும் பணியில் ஓ.பி.எஸ்., தீவிரமாக ஈடுபட்டார். இன்று,(மார்ச்,9) ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீனஸ் காலனியில் உள்ள வீட்டில் குடியேறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.