Breaking News
பிரதமர் புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு ஜியோ, பேடிஎம் நிறுவனங்கள் மன்னிப்பு

பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தியதற்கு பேடிஎம், ஜியோ நிறுவனங்கள் மன்னிப்பு கோரின.

விளம்பரம்:

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‛ஜியோ’ நிறுவனமும், பேடிஎம் நிறுவனமும் தங்களுடைய நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு பிரதமர் மோடியின் படத்தை பயன்படுத்தினர். இதற்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்தன.

நோட்டீஸ்:

பார்லி.,யிலும் இந்த பிரச்சனையை ஏதிர்கட்சிகள் எழுப்பின. இதனைத் தொடர்ந்து பேடிஎம் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு விளம்பரத்தில் பிரதமரின் படத்தை பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

மன்னிப்பு:

இந்நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன் படுத்தியதற்கு பேடிஎம், ஜியோ ஆகிய இரு நிறுவனங்களும் தற்போது மன்னிப்பு கோரியுள்ளன. இதனை நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்சர் சி.ஆர்.சவுத்ரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.