Breaking News
ரொக்கமில்லா பரிவர்த்தனை; தேர்தல் ஆணையம் பரிந்துரை

”தேர்தலில் கறுப்பு பணம் புழங்குவதை தடுக்கும் பொருட்டு, ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை நடைமுறைபடுத்த வேண்டும்,” என, தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி கூறினார்.

நன்கொடை அளவு குறைப்பு:

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தேர்தலில் முறைகேடு நடப்பதற்கு, கறுப்பு பணம் புழங்குவது முக்கிய காரணம். தேர்தலில் கறுப்பு பண புழக்கத்தை ஒழிக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தனிநபர்களிடம் இருந்து, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை அளவு, 20 ஆயிரத்தில் இருந்து, 2,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கறுப்பு பணம் ஒழியும்:

குறைவான தொகையில் வரும் நன்கொடைகள் பெரும்பாலும், ரொக்கமாகவே வருவதாக, அரசியல் கட்சிகள் கூறுகின்றன; கிராமப்புறங்களிலும், ரொக்கமில்லா பணம் மூலம் நன்கொடை பெறுவது கடினம் என்பது, அரசியல் கட்சிகளின் வாதம். ஆனால், ரொக்கமில்லா பண பரிவர்த்தனை நடந்தால் மட்டுமே, கறுப்பு பணம் புழங்குவதை தடுக்க முடியும். இது பற்றி விரைவில் அரசியல் கட்சிகளுடன், தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.