Breaking News
பன்னீருக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ., ஆதரவு!

கோவை வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருண்குமார், பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார். இதனால், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

நடுநிலை:

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரும் முன், சசிகலா ஆதரவு அணியில் இருந்த, கோவை வடக்கு தொகுதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., அருண்குமார், கூவத்துார் விடுதியில் இருந்து, வெளியேறினார். ‘பழனிசாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க விரும்பவில்லை’ எனக் கூறி, ஓட்டெடுப்பை புறக்கணித்து, சொந்த ஊர் திரும்பினார். அவர் எந்த அணிக்கும் ஓட்டு அளிக்காமல் நடுநிலை வகித்தார்.

ஆதரவு:

இந்நிலையில், நேற்று பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில் சந்தித்த அருண்குமார், தன் ஆதரவை தெரிவித்தார். அவருடன், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, மூன்று பொதுக்குழு உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.

வெற்றி கணக்கு:

அப்போது, அருண்குமார் கூறுகையில், ”கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்த கும்பலை எதிர்த்து, தர்ம யுத்தத்தை துவக்கி உள்ள, பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளேன். கட்சியும், ஆட்சியும் அவரிடம் வந்து சேரும். ஆர்.கே.நகர் தொகுதியில், வெற்றி கணக்கை துவக்குவோம்,” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.