Breaking News
தமிழகத்தில் வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு

தமிழகத்தின் பல இடங்களில், வெப்ப நிலை இயல்பை விட, 5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.

வெப்பம் உயர்வு:

மார்ச் முதல் கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வெப்ப நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம், ஒரு வாரமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழையும் பெய்கிறது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, கரூர் மாவட்டம் பரமத்தியில், அதிகபட்சமாக, 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தமிழகத்தில், இயல்பை விட சராசரி வெப்ப நிலை, 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.

மழை தொடரும் :

நேற்று காலையுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தேனி, கந்தர்வகோட்டை, சேத்தியாதோப்பு ஆகிய இடங்களில், 3; மதுரை தெற்கு, பேரையூர், புதுக்கோட்டை பெருங்களூர், சிவகிரியில், 2; பண்ருட்டி, வானுாரில் தலா, 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

‘அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சில பகுதிகளில், இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.