Breaking News
வங்கிகளில் ரூ.17,750 கோடி மோசடி; எஸ்.பி.ஐ., வங்கி முதலிடம்

வங்கிகளில் கடந்த 2016ம் ஆண்டில் 17,750 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது. இதில் பண மதிப்பின் அடிப்படையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும், மோசடிப் புகார்களின் அடிப்படையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியும் முதலிடம் பிடித்துள்ளன.

மோசடி:

நடப்பு நிதியாண்டில், ஏப்., – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில், 17,750 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது. இது, தொடர்பாக, 3,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ; அதில், வங்கி ஊழியர்கள், 450 பேரும் அடங்குவர்.

பண மதிப்பின் அடிப்படையில்..

மோசடியில், பண மதிப்பின் அடிப்படையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகியவை, முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்த வங்கிகளில், முறையே, 2,237 கோடி ரூபாய், 2,250 கோடி ரூபாய் மற்றும், 1,998 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது.

புகார்களின் அடிப்படையில்..

அதிகமான மோசடிப் புகார்களில் சிக்கிய வங்கிகளின் பட்டியலில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி (455 மோசடி புகார்கள்), எஸ்.பி.ஐ., வங்கி (429 மோசடி புகார்கள்), ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (455 மோசடி புகார்கள்) ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. அடுத்த இடங்களில், எச்.டி.எப்.சி., பேங்க், ஆக்சிஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, சிட்டி பேங்க் ஆகியவை உள்ளன.

மதிப்பீட்டு காலத்தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவைச் சேர்ந்த, 64 ஊழியர்கள் மீது, பண மோசடியில் தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.