Breaking News
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்., ராணுவம் எல்லலையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாராவின் காலரூஸ் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை நடத்தி வருகின்றனர். 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ராணுவத்தினர் சுட்டதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.