Breaking News
வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை(மார்ச் 18) இரவு 11.05 மணியவில், வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு செல்லும் வழியில் உள்ள செக் போஸ்ட்டிற்கு காரில் வந்த நபர் ஒருவர் தனது காரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து, செக்போஸ்ட் மூடப்பட்டது. அந்த நபரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கார் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிரமாக சோதனை செய்தனர். காரில் வெடிகுண்டு இருந்ததா இல்லையா என்பது பற்றி உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை. அந்த செக்போஸ்ட் தொடர்ந்து மூடப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.