Breaking News
யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா கைது

வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திராவை போலீசார் கைது செய்தனர்.
நொய்டாவில் வீடுகள் கட்டி தரும் திட்டங்களில் யுனிடெக் நிறுவனம் ஈடுபட்டது. இதற்காக மக்களிடம் பணம் வாங்கிய அந்நிறுவனம் குறிப்பிட்ட நேரத்தில் வீடுகளை கட்டி தரவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக பலர் போலீசிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சஞ்சய் சந்திரா மற்றும் அவரது சகோதரர் அஜய் சந்திராவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.