Breaking News
கொலம்பியாவில் மண்சரிவு: 250க்கும் மேற்பட்டோர் பலி

கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள மொகாவோ நகரில் கடுமையான மழை பெய்தது. இதனால் மண்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டபல அடித்து செல்லப்பட்டன. இதில் 250க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல் கட்ட தகவல்படி 206 பேர் பலியானார்கள். 202 பேர் காயமடைந்துள்ளனர். 220 பேரை காணவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் பலியானதற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் ஜூவன் மானுவேல், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மீட்பு பணி மற்றும் மருத்துவ உதவிகளை விரைந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.