Breaking News
டிஜிபி.,க்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

ஆர் கே நகர் இடைத்தேர்தல் குறித்து நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் ஓட்டுவேட்டையில் ஈடுபட்டுள்ளன. அங்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா நேரில் வந்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து நாளை தலைமை தேர்தல் அலுவலகத்தில் நாளை ஆலோசனை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ஆகியோர் வருமாறு அழைப்பு விடுத்துள்ளது தேர்தல் ஆணையம்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.