Breaking News
இந்திய அணி வெற்றி

பெண்களுக்கான உலக ஹாக்கி லீக் போட்டியின் 2-வது சுற்று போட்டி கள் வெஸ்ட் வான்கூவர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் உருகுவேவை எதிர்த்து இந்திய அணி ஆடியது. ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் ராணி ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். 45-வது நிமிடத்தில் உருகுவே அணியின் மரியா தெரசா ஒரு கோல் அடித்தார்.

வந்தனா கட்டாரியாவின் பீல்ட் கோல் மூலம் 49-வது நிமிடத்தில் இந்திய அணி மீண்டும் முன்னிலை பெற்றது. ஆனால் 54-வது நிமி டத்தில் உருகுவே வீராங்கனை மானுலா விலார் கோல் அடித்தார். இதனால் ஆட்டநேர இறுதியில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்து சமநிலையில் இருந்தன. வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனாலிடி ஷூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டது.

இதில் இந்திய அணி 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.